Monday, May 02, 2016

குதிகால் வலி

குதிகால் வலிக்கு விடை தரலாம்.


தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். 
ஆனால், 
இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். 
வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், 
சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 
பிறகு, 
இவர்கள் பகல் முழுவதும் 
வேலை பார்த்துவிட்டு, 
இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி 
ஏற்படும். 
இந்தப் பிரச்னைக்கு ‘பிளான்டார்ஃபேசியைட்டிஸ்’ என்று பெயர். 
குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’ எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. 
குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் 
இணையும் இடத்தில்
ஒருவித அழற்சி ஏற்பட்டு, 
வீக்கம் உண்டாகிறது. 
இதனால் குதிகால் வலி 
ஏற்படுகிறது.

இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். 
குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், 
சீக்கிரமே அழற்சி அடைந்து 
குதிகால் வலியை 
ஏற்படுத்திவிடும்.

குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், 
தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். 
கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. 
சைக்கிள் ஓட்டும் பயிற்சி, 
குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி. 
உடல் பருமன் இருந்தால் 
எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் 
பாரம் குறைந்து வலி 
சீக்கிரத்தில் விடைபெறும். 
குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. நீரிழிவு நோய் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.

பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம். 
அழுத்தமான ஷூக்களையும் அணியக்கூடாது. 
லூசான ஷூக்களையும் அணியக்கூடாது. 
புகைபிடிக்கக் கூடாது. புகையிலையில் உள்ள நிகோட்டின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இயற்கையாகவே நம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவு. இதில் புகைபிடிப்பது என்பது, 
எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரிதான்!
.
கவனம்.
.
இனி 
நண்பர்
‪#‎சுந்தர்_வாசுதேவன்‬ தரும் எளிய மருத்துவம். 
.
ஓட்டு வீடுகளில் உடைந்த ஓடு இருந்தால் அதனை சூடாக்கி அதன் மீது எருக்க இலையினை போட்டு அதில் குதிகாலை வைத்து வந்தாலே இந்த குதிகால் வலி போய்விடும்..எருக்க இலை குதிகால் வலிக்கு சிறந்த மருந்து. பிளான்டார் திசுவின் கொழுப்பை சூடான எருக்க இலை கரைத்து விடும். 

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk