ஒரு ரூபாய் தர்மம்.
திருவண்ணாமலை
கிரிவலம் வரும்போது
வித்தியாசமான
"ஒரு ரூபாய் தர்மம்" செய்யுங்க கோவில் கட்டப்போறம்
என்ற குரலைக்
கேட்கமுடியும்.
சரி,
அதற்கென்ன இப்போ
என்பதற்கு பதில்.....
திருவாரூரில்
ஒருசில
அலைபேசி
தொகையேற்றும் (ரீசார்ஜ்) கடைகளில்
இந்த
ஒருரூபாய் பிச்சை
தொடர்கிறது.
பத்து ரூபாய்க்கு 11கேட்கிறார்கள்.
150ரூ.க்கு
151 ரூ. கேட்கிறார்கள்.
அதையும்
நியாயப்படுத்துகிறார்கள்.
பாவிப்பாளர்களும்
ஒரு ரூபாய் தானே போகட்டும்
என்று விட்டுவிடுகின்றனர்.
இந்த
ஒரு ரூபாய் அறத்திற்குக்
காரணம் ஏதுமுண்டா
அறிந்தவர்கள்
விளக்கம் தரவும்.
நன்கு
சிரித்துப்பேசிக்
கொண்டே
ஒரு ரூபாய் கேட்பது
இன்னும்
அசிங்கமாக உள்ளது.
பல கடைகளில்
சரியான தொகையே
கேட்கிறார்கள்.
உங்கள் ஊரிலும்
உண்டா?

No comments:
Post a Comment