Wednesday, November 30, 2016

அணி இலக்கணம்

வஞ்சப் புகழ்ச்சியணி
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

புகழ்வது போல் இகழ்தல்

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

திருக்குறள் – திருவள்ளுவர்
“கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்” என்பது இக்குறட்பாவின் பொருள்.

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

இகழ்வது போல் புகழ்தல்
________________________________
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே

புறநானூறு பாடியவர்: கபிலர்
“புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது” என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.
(இகழ்வது போல் புகழ்தல்)

SankaranNsk

Wednesday, November 23, 2016

எல்லோரும் நல்லவரே..

நல்லவர் சூழ் உலகு.
..........................................
ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.
அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.
அதைப் பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'
"நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..
அசையாமல்..
என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.
'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.
'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.

'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..
நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..
உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..
வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...?
அதே போன்று தானே..
நீ என்னைத் தின்றால் நானும் வருத்தமடைவேன்.
அது போலவே..
அந்த வேடன் உன்னை விடுவித்தால்..
நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...
நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..
அதுதானே
நட்பின் இலக்கணம் என்றது.
புறா...புழுவின் பேச்சுத் திறமையைப்பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.

நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது..
எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.

உலகில் எல்லோரும் நல்லவர்களே!.

SankaranNsk

Tuesday, November 22, 2016

தன்னம்பிக்கை

*"தன்னம்பிக்கை கதை"*

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன.
அந்த வழியே போன ஒருவன் யானைகளைப் பார்த்தபடியே சென்றான்.
ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.

அருகில் இருந்த பாகனிடம்
இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். *இந்த யானைகள் சிறியதாக இருக்கும்போது இந்தக்கயிற்றல்தான் கட்டினோம்.*

அப்போது அது இழுக்கும்போது இந்த கயிறுகள் அறுபடவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை
என்று பாகன் சொன்னான்.

அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்,
இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம்
ஆனால் அவைகள் அதற்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.

இந்த யானைகள் போல்
*நம்மில்எத்தனைபேர்                       ஒருமுறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகிறோம்.*

தோல்வி என்பது நாம் ஜெயிக்கபோவதின் முதல் படியே.
*தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்...!*

🔵 *SankaranNsk*🔵

Friday, November 18, 2016

கோபம் (Angry)

தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.
அரண்மனை அறைக்குள்நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி
ஏனெனில் சுற்றிலும்
நூற்றுக்கணக்கான
நாய்கள் இருந்தன.
சற்று எரிச்சலடைந்து
"உர்ர்.. உர்ர்.." என்றது,
அந்த நாய்களும் பதிலுக்கு
"உர்ர்.. உர்ர்.." என்றது.
அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல்
"லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது.
அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.
மறுபடியும்
கோபமும் பயமும் அதிகமானது. உடனே வெறி பிடித்ததைப் போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது
பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன.
இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.
அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்,
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளைக் கொண்ட அறை .
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள்.
3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் பிம்பம்.
நீதி:
உலகம் கண்ணாடி போன்றது.
நாம் கோபப்பட்டால்
பதிலுக்குக்
கோபம் கிடைக்கும்.
அன்பு செலுத்தினால்
அன்பு கிடைக்கும்.
நன்றி.
SankaranNsk

Thursday, November 17, 2016

தேடி

மொபைல் போன்களில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும். இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும். உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் இந்த பிரவுசரை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
இணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.
Multi Tabs வசதி.
மிகச்சிறந்த தேடியந்திரம்
மிகச்சிறந்த டவுன்லோட் மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.
மெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.
Bookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.
பிரவுசரில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம்.
மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.

Download Links

for Android mobiles - Download link
for Symbian mobiles - Download link
for Java mobiles - Download link
for Windows mobiles - Download link
for Blackberry mobiles - Download link
for Iphone - Download link
for Other mobiles - Download link

மொபைல் மூலமாக டவுன்லோட் செய்ய - http://wap.ucweb.com/

Tuesday, November 08, 2016

சுந்தரகாண்டம்

#சுந்தரகாண்டத்தை_படிப்பதால்_கிடைக்கும்_நன்மைகள்

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று கூறப்பட்டு உள்ளது.

2.சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

3.சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

4.சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

5.சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

6.ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணெய் வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

7.ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

8.சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

9. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

10.சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

11. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தைப் பெற முடியும்.

12.சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

13.சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

14.சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

15.சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

16.சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜெய் ஸ்ரீ ராம்.
SankaranNsk

Tuesday, November 01, 2016

மனோன்மணி மிலிடேரி ஹோட்டல

உள்ளே நுழைந்ததும் வாங்க என்று அன்பொழுக அழைக்கும் உரிமையாளர் குரலும்.
மீன்குழம்பின் வாசனையும் நம்மைக்கிறுகிறுக்கவைக்கும்.

திருவாரூர் பழைய புகைவண்டி சந்திப்பருகே நெருக்கடியான இடத்தில் நீலநிற பெயர் பலகை நம்மை வரவேற்கும்.

சுதந்திரக்காலம்தொட்டே ஒரே சுவையுடன் அம்மா கை பக்குத்தோடு 

மீன்குழம்பும் மட்டன் குழம்பும் கிடைத்தால் யார்தான் மயங்கமாட்டார்கள்.

அதுவும் சுடச்சுட வறுவல் மீனும், இறாலும்,  குழம்புமீனும் கிடைத்தால் அசைவப்பிரியர்களுக்குக் கொண்டாட்டம்வந்துவிடாதா?பெரும்பாலும்    உரிமையாளரே பரிமாறுகிறார்.  இப்போதெல்லாம் அவர் அன்புமகனும் பரிமாறுகிறார்.   

வேறென்னசாப்பிடறீங்க? என்று அவர்கள் கேட்கிற அழகே வயிற்றை நிறைக்கும்.

நாம் சாப்பிட பதினைந்து நிமிடமென்றால்                 இடம்பிடிக்க அரைமணிநேரமாவது ஆகும்.

காரணம் 

ஓரேநேரத்தில் பத்து பனிரண்டுபேரே சாப்பிடமுடியும். நாம் அமர்ந்து சாப்பிட்ட இடத்தைப்பிடிக்கப் போட்டிநடக்கும்.

திருவாரூர் வரும் பல அரசு தனியார் உயரதிகாரிகளின்     மதிய , இரவு உணவு  மனோன்மணி சாப்பாடுதான். இதற்காக வருபவர்களும் உள்ளனர்.

மதியம் இரண்டரை மணிவரை சாப்பாடு கிடைக்கும்.                    இரவு ஏழரைக்கு சாம்பிராணி போட்டதும்                                         கடந்த நாற்பதாண்டுகளுக்கும்மேலாய் நாள்தவறாது சாப்பிடும் (தரமும்சுவையும் புரிகிறதா?)     வாடிக்கையாளர் பெரியவர் ஒருவருக்கு                         முதல்இலை போடுவார்கள்.      பிறகே மற்றவர்களுக்கு..

சிலவாடிக்கையாளர்கள் இரண்டொரு மீன்துண்டுகள் கேட்கும்போது நாளைக்கு சாப்பிடலாம் என்று நாசுக்காய் மறுப்பார்.இன்றுவரை குறிப்பிட்ட அளவுக்கு அதிகம் உணவைத்தயாரிப்பதில்லை.

ஞாயிறன்றும் அமாவாசையன்றும் கடைகிடையாது.பல அரசு அதிகாரிகள் திருவாரூர்வந்தால் முதலில் சொல்லும் வார்த்தை மனோன்மணி சாப்பாடு சொல்லிடுங்க என்பதாகவே இருக்கும்.

நீங்கள் திருவாரூர் வந்தால் ஒருமுறை சாப்பிட்டுப்பாருங்கள்.

அதன்பின்னர் அந்த மீன்குழம்பும் மட்டன்குழம்பும்  திருவாரூர் பெயரைக்கேட்டதும் நாவில் ஊறும்.

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk