தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.
அரண்மனை அறைக்குள்நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி
ஏனெனில் சுற்றிலும்
நூற்றுக்கணக்கான
நாய்கள் இருந்தன.
சற்று எரிச்சலடைந்து
"உர்ர்.. உர்ர்.." என்றது,
அந்த நாய்களும் பதிலுக்கு
"உர்ர்.. உர்ர்.." என்றது.
அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல்
"லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது.
அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.
மறுபடியும்
கோபமும் பயமும் அதிகமானது. உடனே வெறி பிடித்ததைப் போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது
பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன.
இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.
அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்,
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளைக் கொண்ட அறை .
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள்.
3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் பிம்பம்.
நீதி:
உலகம் கண்ணாடி போன்றது.
நாம் கோபப்பட்டால்
பதிலுக்குக்
கோபம் கிடைக்கும்.
அன்பு செலுத்தினால்
அன்பு கிடைக்கும்.
நன்றி.
SankaranNsk
Friday, November 18, 2016
கோபம் (Angry)
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
நான்
SankaranNsk
No comments:
Post a Comment