Wednesday, December 14, 2016

மன உறுதி


ஒரு அரசனுக்கு
தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.
அதை குணப்படுத்த,
மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள
மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..!
அதற்கு மலையடிவாரத்தில்
உள்ள தேவதை
வழிகாட்டினால்தான் முடியும்..!
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..!
அதில் முதலாமவன்
"நான் கொண்டுவருகிறேன்" என கிளம்புகிறான்..!
தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..!
"நான் உன்பின்னால் வருவேன்..!
நான் இடது பக்கம் திரும்பு
என்றால் இடது பக்கம்
திரும்ப வேண்டும்..!
வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்..!
நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..!
நடந்து கொண்டே
இருக்கவேண்டும்..!
எது நடந்தாலும் பின்னால்
திரும்பி பார்க்ககூடாது..!"
இதுதான் நிபந்தனை என்கிறது..!
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது..!
தீடிரென பின்னால்வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை..!
"என்னாயிற்று..?"என தன்னையறியாமல்
முதாலமவன் திரும்பி
பார்க்கிறான்..!
நிபந்தனையை மீறிவிட்டதால் அவன் கற்சிலையாகிவிடுகிறான்..!
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..!
நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்..!
தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது..!
ஆர்வம் மிகுதியால் திரும்பிப்பார்க்கிறான்..!
அவனும் கற்சிலையாகி விடுகிறான்..!
மூன்றாமவன் அடுத்து வருகிறான்..!
இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை பின் செல்கிறது..!
இவனும் பின் வரும்
சத்தம் நின்று போனாலும்
முன்னே செல்கிறான்..!
பின்னால்
அலறல் சத்தம்,
சிரிப்பொலி இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று
மூலிகையையும் கை பற்றுகிறான்..!
குறிப்பு:
பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு..!
அது நிபந்தனையை விதித்துவிட்டு, செயல் உறுதியைத்தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும்..!
SankaranNsk

Tuesday, December 13, 2016

புயலுக்கு ஏன் பெயர்?


Tuesday, 13 December 2016
ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா?
வானிலை ஆய்வாளர்களும்,
கடல் மாலுமிகளும்,
பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு வசதியாகவே
ஒவ்வொரு புயலுக்கும்தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
மேலும் புயலுக்கு முன்பு
பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு,
தயாரிப்பு,
மேலாண்மை,
பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
.
புயல் சின்னம் உருவாகும் போது எல்லாம் அதற்கு
ஒரு பெயர் சூட்டும் வழக்கம்
20 நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது.
பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது
அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம்.
.
ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள்
அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம்..
.
அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே,
மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது,
எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகவும்,
புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை
இதன்மூலம் தவிர்க்கலாம் என்பதற்காக மனிதர்களைப்போல புயல்களுக்கும்
பெயர் சூட்ட தொடங்கியுள்ளனர்.
.
ஆஸ்திரேலியா தான் இந்த பழக்கத்தை முதன் முதலில் தொடங்கியது.
பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.
.
இரண்டாம் உலகப் போர்
காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை
வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.
1953-இல் இருந்து
அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால்,
அழிவை ஏற்படுத்தும்
புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு,
1978 முதல்
ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
.
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு
இந்தியா,
இலங்கை,
வங்கதேசம்,
தாய்லாந்து,
மியான்மர்,
மாலத்தீவு,
ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன.
.
புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது.
.
தில்லியில் உள்ள
உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம்
2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
.
வங்கதேசம்,
இந்தியா,
மாலத்தீவுகள்,
மியான்மர்,
ஓமன்,
பாகிஸ்தான்,
இலங்கை,
தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
இதில்
இந்தியா கொடுத்து
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள்
அக்னி,
ஆகாஷ்,
பிஜ்லி,
ஜல் (நான்கு பூதங்கள்),
லெஹர் (அலை).
மேக்,
சாகர்,
வாயு. இந்த 8 பெயர்களுமே
பஞ்ச பூதங்களை குறிப்பவை
என்பது குறிப்பிடத்தக்கது.
.
கடைசியாக சென்னையைத்
தாக்கிய "நடா' புயலுக்கு
ஓமன் அப்பெயரைச் சூட்டியிருந்தது.
.
இந்நிலையில்,
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தையும்,
தென் பகுதி ஆந்திரத்தையும் தாக்கியுள்ள
"வர்தா' புயலுக்கு பாகிஸ்தான் அப்பெயரைச் சூட்டியுள்ளது.
உருதுச் சொல்லான
வர்தாவுக்கு தமிழில்
சிவப்பு ரோஜா என்று பொருளாகும்.
.
SankaranNsk

Saturday, December 03, 2016

108 ஐயப்ப சரணம்


ஐயப்பன் 108 போற்றி

இந்த சரணத்தை மிகுந்த பக்தியுடன் குருசாமியோ,
வீட்டில் பெரியவரோ சொல்ல மற்றவர்கள் தொடர்ந்து

 "சரணம் ஐயப்பா' என முழங்க வேண்டும்.
ஒலிபெருக்கி மூலம் மற்றவர்களுக்கு தொல்லை தருவதைத் தவிர்க்க வேண்டும்.

கன்னிமூல கணபதியே... சரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியே... சரணம் ஐயப்பா
ஹரிஹரசுதனே... சரணம் ஐயப்பா
அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா
ஆறுமுகன் சோதரனே... சரணம் ஐயப்பா
ஆபத்தில் காப்பவனே... சரணம் ஐயப்பா
இன்தமிழ்ச் சுவையே... சரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனே... சரணம் ஐயப்பா
ஈசனின் திருமகனே... சரணம் ஐயப்பா
ஈடில்லா தெய்வமே... சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே... சரணம் ஐயப்பா
உலகாளும் காவலனே... சரணம் ஐயப்பா
ஊமைக்கருள் புரிந்தவனே... சரணம் ஐயப்பா
ஊழ்வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
எளியோர்க்கு அருள்பவனே... சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமே... சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளனே... சரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியே... சரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியே... சரணம் ஐயப்பா
ஐயமெல்லாம் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
ஒப்பில்லாத் திருமேனியே... சரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கே... சரணம் ஐயப்பா
ஓம்காரப் பரம்பொருளே.. சரணம் ஐயப்பா
ஓதும் மறைபொருளே.. சரணம் ஐயப்பா
அவுடதங்கள் அருள்பவனே.. சரணம் ஐயப்பா
சவுபாக்கியம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
கலியுக வரதனே... சரணம் ஐயப்பா
சபரிமலை சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
சிவன்மால் திருமகனே... சரணம் ஐயப்பா
சிந்தனையில் நிறைந்தவனே... சரணம் ஐயப்பா
அச்சன்கோயில் அரசே... சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயாவே... சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலகனே... சரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனே... சரணம் ஐயப்பா
வாபரின் தோழனே... சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனே... சரணம் ஐயப்பா
வீர மணிகண்டனே... சரணம் ஐயப்பா
உத்திரத்தில் உதித்தவனே... சரணம் ஐயப்பா
உத்தமனே சத்தியனே... சரணம் ஐயப்பா
பம்பையில் பிறந்தவனே... சரணம் ஐயப்பா
பந்தளத்தில் வளர்ந்தவனே... சரணம் ஐயப்பா
சகலகலை வல்லோனே... சரணம் ஐயப்பா
சாந்தம் நிறை மெய்ப்பொருளே... சரணம் ஐயப்பா
குருமகன் குறைதீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருதட்சணை அளித்தவனே... சரணம் ஐயப்பா
புலிவாகன புண்ணியனே... சரணம் ஐயப்பா
புலிப்பாலைக் கொணர்ந்தவனே... சரணம் ஐயப்பா
தாயின் நோய் தீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருவின் குருவே... சரணம் ஐயப்பா
துளசிமணி மார்பனே... சரணம் ஐயப்பா
தூயவுள்ளம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
இருமுடிப் பிரியனே... சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
நித்ய பிரம்மச்சாரியே... சரணம் ஐயப்பா
நீலவஸ்திர தாரியே... சரணம் ஐயப்பா
பேட்டை துள்ளும் பேரருளே... சரணம் ஐயப்பா
பெரும் வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
சாஸ்தாவே பரம்பொருளே... சரணம் ஐயப்பா
சாந்தி தரும் பேரருளே... சரணம் ஐயப்பா
பேரூர்த்தோடு தரிசனமே... சரணம் ஐயப்பா
பேதமையை ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
காளைகட்டி சிவன் மகனே... சரணம் ஐயப்பா
அதிர்வேட்டுப்பிரியனே... சரணம் ஐயப்பா
அழுதைமலை ஏற்றமே.... சரணம் ஐயப்பா
ஆனந்தமிகு பஜனை பிரியனே... சரணம் ஐயப்பா
கல்லிடும் குன்றமே.... சரணம்ஐயப்பா
உடும்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
இஞ்சிப்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
கரியிலந்தோடே... சரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
கரிமலை இறக்கமே... சரணம் ஐயப்பா
பெரியானை வட்டமே... சரணம் ஐயப்பா
சிறியானை வட்டமே... சரணம் ஐயப்பா
பம்பா நதித் தீர்த்தமே... சரணம் ஐயப்பா
பாவமெல்லாம் அழிப்பவனே... சரணம் ஐயப்பா
திரிவேணி சங்கமமே... சரணம் ஐயப்பா
திருராமர் பாதமே... சரணம் ஐயப்பா
சக்தி பூஜை கொண்டவனே... சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் செய்தவனே... சரணம் ஐயப்பா
தீபஜோதித் திருஒளியே... சரணம் ஐயப்பா
தீராத நோய் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே... சரணம் ஐயப்பா
பலவினைகள் ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
தென்புலத்தார் வழிபாடே... சரணம் ஐயப்பா
திருப் பம்பையின் புண்ணியமே... சரணம் ஐயப்பா
நீலிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
நிறைவுள்ளம் தருபவனே... சரணம் ஐயப்பா
அப்பாச்சி மேடே... சரணம் ஐயப்பா
இப்பாச்சி குழியே... சரணம் ஐயப்பா
சபரி பீடமே...... சரணம் ஐயப்பா
சரங்குத்தியானே..... சரணம் ஐயப்பா
உரல்குழி தீர்த்தமே... சரணம் ஐயப்பா
கருப்பண்ணசாமியே... சரணம் ஐயப்பா
கடுத்த சாமியே.... சரணம் ஐயப்பா
பதினெட்டாம்படியே.... சரணம் ஐயப்பா
பகவானின் சந்நிதியே..... சரணம் ஐயப்பா
பரவசப் பேருணர்வே.... சரணம் ஐயப்பா
பசுவின் நெய்யே..... சரணம் ஐயப்பா
கற்பூரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
நாகராஜப் பிரபுவே.... சரணம் ஐயப்பா
மாளிகைப் புறத்தம்மனே.... சரணம் ஐயப்பா
மஞ்சமாதா திருவருளே.... சரணம் ஐயப்பா
அக்கினி குண்டமே.... சரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
பஸ்மக் குளமே ... சரணம் ஐயப்பா
சற்குரு நாதனே ... சரணம்ஐயப்பா

மகர ஜோதியே.... சரணம் ஐயப்பா

ஐயப்ப விரதம்.

கார்த்திகை முதல்நாள் நீராடி, பெற்றோரை வணங்க வேண்டும்.

#குருசாமியின்
கரத்தால் மாலை அணிய வேண்டும்.

குருசாமி மூலம் முடியாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து
.
"சுவாமியே சரணம் ஐயப்பா!
உன் தரிசனம் தடையின்றி
கிடைக்க வேண்டும்.
இந்த விரதம் எவ்வித பிரச்னையுமின்றி
முடிவதற்கு அருள்தருவாய்,''
எனச் சொல்லி அணிந்து கொள்ள வேண்டும்.

அன்றுமுதல் தினமும்
குளிர்ந்த நீரில் காலையும் மாலையும் நீராடி,
108 முறை ஐயப்ப சரணம் கூறி, ஐயப்பன் படத்துக்கு பூஜை செய்ய வேண்டும்.
.
இரவில் தூங்கும் போது மெத்தை, தலையணை பயன்படுத்தக்கூடாது.

மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

பகலில் தூங்கக் கூடாது.

பிரம்மச் சரியம் மேற்கொள்ள வேண்டும்.

அசைவ உணவு, போதைப் பொருட்கள் பழக்கம் இருந்தாலும்,

""இனி என் வாழ்க்கையில் இதை இனி தொடவே மாட்டேன்,''
என சங்கல்பம் (சத்தியம்) செய்ய வேண்டும்.

இதைச் செய்யாத பட்சத்தில் மாலையணிந்து சபரிமலை சென்றாலும்,
ஐயப்பன் இப்படிப்பட்டவர்களின் பிரார்த்தனையை
ஏற்கவே மாட்டான்.

விரதகாலத்தில்,
பிறருடன் சண்டை சச்சரவு களிலும் ஈடுபடக்கூடாது.

உரையாடும் போதும்,
முடிக்கும் போதும்
"#சுவாமிசரணம்' என்று கூற வேண்டும்.

இலையில் சாப்பிடுவதுடன், இயன்ற அளவு அன்னதானம் வழங்க வேண்டும்.

கன்னிசுவாமிகள் வீட்டில் கன்னி பூஜை நடத்தி, சக பக்தர்களையும், ஏழைகளையும் ஐயப்பனாகக் கருதி சித்ரான்னங்கள் (தயிர்சாதம், எலுமிச்சை சாதம்,
தேங்காய் சாதம்,
சாம்பார் சாதம்,
புளியோதரை போன்ற சிற்றுண்டிகள்) தானம் செய்யலாம்.

நெருங்கிய உறவினர் இறப்பு ஏற்பட்டால் மாலையைக் கழற்றிவிட வேண்டும்.

அதன்பின் விரதத்தை தொடரவோ, மலைக்குச் செல்லவோ கூடாது.

பக்தர்கள் நடத்தும் ஐயப்பன் பூஜை,
பஜனைகளில் கலந்து
கொள்ள வேண்டும்.

மாலையணிந்தவர்கள்
வீடு, திருமண வீடுகளில்
மட்டும் உணவு அருந்தலாம்.

பூப்புனித நீராட்டு விழா வீட்டிற்கு செல்லக்கூடாது.

மலைக்குச் செல்லும் நாட்கள் தவிர பிற நாட்களில் கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தெருக்களில் விற்கும் பலகாரங்களையும் சாப்பிடக்கூடாது.

சபரிமலைக்கு சென்று திரும்பிவிட்டாலும்,
மகர பூஜை (தை1) முடியும் வரை முந்தைய நாட்களைப் போலவே விரதம் இருக்கலாம்.

SankaranNsk

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk