Sunday, February 05, 2017

தமிழ்

1. குலம் ஒன்று:
மனித குலம் ஒன்று ...

2. இனம் இரண்டு:
ஆண்
மற்றும்
பெண் என இனம் இரண்டு

3. தமிழ் மூன்று:
இயல்,
இசை ,
நாடகம் என தமிழ் மூன்று

4. மறை நான்கு:
மறை என்பது வேதங்கள் ஆகும்.
ரிக் வேதம்,
யசுர் வேதம்,
சாம வேதம் ,
அதர்வண வேதம் என வேதங்கள் நான்கு

5. புலன் ஐந்து:
கண்,
காது,
நாக்கு,
தோல் ,
மூக்கு என புலன் ஐந்து

6. சுவை ஆறு:
துவர்ப்பு,
இனிப்பு,
புளிப்பு,
கார்ப்பு,
கசப்பு ,
உவர்ப்பு என சுவை ஆறு

7. குணம் ஏழு:
குண்டலினி யோகம் எனப்படும் மூலாதாரம்,
சுவாதிஷ்டானம்,
மணிப்பூரகம்,
அனாகதம்,
விசுக்தி ,
ஆக்கினை ,
துரியம் என குணம் ஏழு

8. திக்கு எட்டு:
குபேரன் (வடக்கு),
யமன் (தெற்கு),
இந்திரன் (கிழக்கு),
வருணன் (மேற்கு),
ஈசானன் (வடகிழக்கு),
அக்னி (தென்கிழக்கு),
வாயு (வடமேற்கு) ,
நிரிருதி (தென்மேற்கு) என திக்கு எட்டு

9. ரசம் ஒன்பது:
நகை,
அழுகை,
இளிவரல்,
மருட்கை,
அச்சம்,
வெகுளி,
பெருமிதம்,
உவகை ,
அமைதி என ரசம் ஒன்பது.

Sankaran Nsk

Saturday, February 04, 2017

கொக்கொக்க

கடும்மழை
வெளுத்து
வாங்கியது.
வெள்ளநீர் மட்டம் உயர்ந்து வந்து கொண்டிருந்தது.
மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடம் நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். ஆனால்  ஒருவன் மட்டும் நகரவே இல்லை.
*என்னைக் கடவுள் காப்பாற்றுவார்*
என்று  வணங்கிக் கொண்டிருந்தான்.
நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது.
உடனே வீட்டின் கூரையில் போய் அமர்ந்து கொண்டான்.

அப்போது அவ்வழியில்
வந்த, படகிலிருந்தவர்கள் இவனை வருமாறு அழைத்தார்கள்.
ஆனால்

*"என்னைக் கடவுள் காப்பாற்றுவார்."*

என்று அவர்களை அனுப்பி விட்டான்.

தொடர்ந்து
நீர் மட்டம் அதிகரித்தது.
உடனே
அருகில் இருந்த மரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அப்போதும்
ஒரு படகு வந்தது.
அவர்களும் அழைத்தபோது,

*"கடவுள் காப்பாற்றுவார்"*

என்று சொல்லி போக மறுத்தான்.

இறுதியில்
வெள்ளநீர் அதிகரித்து,
இவன் இறந்து விட்டான்.

*மேலுலகத்தில்
கடவுளைச்
சந்தித்தான்.*

"இறைவனே,
உன் மீது எவ்வளவு நம்பிக்கையோடு,
நான் இருந்தேன்.
ஆனால் கடைசி வரை
நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை."
என்று கேட்டான்.
.
அப்போது கடவுள் சொன்னார்.

*"உன்னைக் காப்பாற்ற இரண்டு படகுகளை அனுப்பினேன்.
நீதான் அதைப்பயன்படுத்திக் கொள்ளவில்லை."*

*SankaranNsk*

*📚ப.பி📚*

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk