ஹீமோகுளோபின்
***********************
.
உடலில் அதிகமான அசதி.
எந்த செயலைச்செய்ய வேண்டுமானாலும்,
பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை,
எதிலும் ஆர்வமின்மை,
உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும்
களைப்பு,
தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால்
படுத்தால் தூக்கம் வராது.
தூக்கம் வராததால்
உடல் ஓய்வு பெறாமல்
ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி.
எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம்.
இந்த நிலையில்தான்
இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை,
மருந்து வாங்கி சாப்பிடலாம்
என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து
அவரைப் பார்த்தால்
பல பரிசோதனைகளைச் செய்யச் சொல்லுவார்.
அவர் கூறிய பரிசோதனைகள் அனைத்தும் செய்து,
அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால்,
உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார்.
நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன்.
ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார்.
அவர் கொடுக்கும்
அதிக விலையுள்ள மாத்திரைகளையும்,
மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி,
அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து,
ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர,
மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை.
நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது.
பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை
இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ,
அதே தடங்கலும்,
தாமதமும்
நம் உடலில் ஏற்படுகிறது.
உடலில்
ஹீமோகுளோபின்
குறையும் பொழுது
மேலே குறிப்பிட்ட
அத்தனை குறைபாடுகளும்
ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல்
அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது.
எவ்வளவு சத்துக்கள்,
எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு,
மீதி உள்ளவற்றைக் கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது.
அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும்,
அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின்
14 - 18 கிராம் அளவிலும்,
******************************
பெண்களுக்கு
12 - 16 கிராம் அளவிலும்
******************************
இருக்கவேண்டும்.
#8கிராம்_அளவிற்கு_கீழே_குறையும் பொழுது,
#இரத்த_சோகை என்ற நோயும்,
மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும்.
ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது,
உடல் மெலிந்து,
களைப்பு,
இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் #அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும்,
உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.
பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களைக்
கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.
பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு,
உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி,
அவைகளை நன்கு இயக்கி,
உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
🔵SankaranNsk 🔵
No comments:
Post a Comment