Thursday, June 28, 2018

இசையரசாங்கம்

1. சுத்தஸாவேரி

மலர்களில் ஆடும் இளமை – கல்யாணராமன் – இளையராஜா
சுகம் சுகமே – நான் போட்ட சவால் – இளையராஜா
கோயில்மணி ஓசை தன்னை – கிழக்கே போகும் ரயில் – இளையராஜா
மணமகளே – தேவர்மகன் – இளையராஜா

2. கெளரிமனோஹரி

மலரே குறிஞ்சி மலரே – டாக்டர் சிவா – எம்.எஸ்.வி.
கெளரிமனோஹரியைக் கண்டேன் – மழலைப்பட்டாளம் – எம்.எஸ்.வி.
பாட்டும் நானே – திருவிளையாடல் – கே.வி.எம்.
முத்தமிழ் கவியே வருக – தர்மத்தின் தலைவன் – இளையராஜா
பொன்வானம் பன்னீர் தூவுதே – இன்று நீ நாளை நான் – இளையராஜா
கண்ணா வருவாயா – மனதில் உறுதி வேண்டும் – இளையராஜா
தூரத்தில் நான் கண்ட – நிழல்கள் – இளையராஜா
அதிகாலை நிலவே – உறுதிமொழி – இளையராஜா
கவிதை  அரங்கேறும் நேரம் – அந்த 7 நாட்கள் – எம். எஸ்.வி.
சோலைப்பூவில் மாலைத்தென்றல் – வெள்ளை ரோஜா – இளையராஜா
செம்மீனே செம்மீனே – செவ்வந்தி – இளையராஜா

3. கல்யாணி

நதியில் டும் பூவனம் – காதல் ஓவியம் – இளையராஜா
நிற்பதுவே நடப்பதுவே – பாரதி – இளையராஜா
சிறு கூட்டுலே – பாண்டி நாட்டுத் தங்கம் – இளையராஜா
வந்தாள் மஹாலக்ஷ்மியே – உயர்ந்த உள்ளம் – இளையராஜா
நான் என்பது நீயல்லவோ – சூரஸம்ஹாரம் – இளையராஜா
மஞ்சள் வெயில் – நண்டு – இளையராஜா
4. தர்பாரி கானடா
ஆகாய வெண்ணிலாவே –  அரங்கேற்ற வேளை – இளையராஜா
இசை மேடையில் – இளமைக் காலங்கள் – இளையராஜா
கல்யாண தேனிலா – மெளனம் சம்மதம் – இளையராஜா

5. ரீதிகெளளை

தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – இளையராஜா
சின்னக் கண்ணன்  அழைக்கிறான் – கவிக்குயில் – இளையராஜா

6. ஸரஸாங்கி

மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா – இளையராஜா
தா தந்தன கும்மி கொட்டி – அதிசயப்பிறவி – இளையராஜா
மல்லிகையே மல்லிகையே – பெரிய வீட்டுப் பண்ணக்காரன் – இளையராஜா

7. சாருகேஸி

சிறிய பறவை – அந்த ஒரு நிமிடம் – இளையராஜா
டல்கலையே – ஸ்ரீராகவேந்திரர் – இளையராஜா
தூது செல்வதாரடி – சிங்காரவேலன் – இளையராஜா
மயங்கினேன் சொல்லத்தயங்கினேன் – நானே ராஜா நானே மந்திரி – இளையராஜா
மணமாலையும் மஞ்சளும் சூடி – வாத்தியார் வீட்டுப்பிள்ளை – இளையராஜா
காதலின் தீபமொன்று – தம்பிக்கு எந்த ஊரு – இளையராஜா
அரும்பாகி மொட்டாகி – எங்க ஊரு காவக்காரன் – இளையராஜா

8. ஹம்ஸாநந்தி

வேதம் – சலங்கை ஒலி – இளையராஜா
புத்தம்புதுப்பூ பூத்தது – தளபதி – இளையராஜா
ராத்திரியில் பூத்திருக்கும் – தங்கமகன் – இளையராஜா
ராகதீபம் ஏற்றும் நேரம் – பயணங்கள் முடிவதில்லை – இளையராஜா

9. ஹம்ஸத்வனி

மயிலே மயிலே – கடவுள்  அமைத்த மேடை – இளையராஜா
பூமுடித்து பொட்டு வைத்த – என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான் – இளையராஜா(பல்லவி)
காலம் மாறலாம் – வாழ்க்கை – இளையராஜா(சரணத்தில் மட்டும் ‘த’ வருகிறது)
இரு விழியின் வழியே – சிவா – இளையராஜா
10. சக்கரவாகம்

வானிலே தேனிலா – காக்கிச்சட்டை – இளையராஜா (சரணத்தில் ‘ரி’ வருகிறது)
வனிதாமணி – விக்ரம் – இளையராஜா
நீபாதி நான்பாதி – கேளடி கண்மணி – இளையராஜா
நல்லவர்க்கெல்லாம் – தியாகம் – இளையராஜா

11. மத்யமாவதி

அடி பெண்ணே – முள்ளும் மலரும் – இளையராஜா(சரணத்தில்  அனுசுரங்கள்)
ஆகாய கங்கை – தர்மயுத்தம் – இளையராஜா
என் கல்யாண வைபோகம் – அழகே உன்னை ராதிக்கிறேன் – இளையராஜா
துள்ளித்துள்ளி – சிப்பிக்குள் முத்து – இளையராஜா
ஆனந்தத் தேன்சிந்தும் – மண்வாசனை – இளையராஜா (சரணத்தில் இரண்டு ‘நி’ வருகிறது)
சோலைக்குயிலே – பொண்ணு ஊருக்கு புதுசு – இளையராஜா
தாலாட்டு – அச்சாணி – இளையராஜா

12. கீரவாணி

கீரவாணி – பாடும் பறவைகள் – இளையராஜா
போவோமா ஊர்கோலம் – சின்னத்தம்பி – இளையராஜா
நெஞ்சுக்குள்ளே – பொன்னுமணி – இளையராஜா
தங்கச்சங்கிலி – தூறல் நின்னுப்போச்சு – இளையராஜா

13. மோஹனம்

மலர்கள் நனைந்தன – இதயக்கமலம் – கே.வி.எம்.
பூவில் வண்டு கூடும் – காதல் ஓவியம் – இளையராஜா
வருக வருகவே – மனைவி ரெடி – இளையராஜா
இந்த அம்மனுக்கு – தெய்வ வாக்கு – இளையராஜா
இரு பறவைகள் – நிறம் மாறாத பூக்கள் – இளையராஜா(சரணத்தில் இறுதியில் அனுசுரங்கள்)
வந்ததே குங்குமம் – கிழக்கு வாசல் – இளையராஜா
மீன்கொடித் தேரில் – கரும்புவில் – இளையராஜா
நான் உந்தன் தாயாக வேண்டும் – உல்லாசப்பறவைகள் – இளையராஜா
ஒரு ராகம் பாடலோடு – னந்தராகம் – இளையராஜா

14. சிந்துபைரவி

நிலவே முகம் காட்டு – எஜமான் – இளையராஜா
தென்றல் வந்து – அவதாரம் – இளையராஜா
முத்துமணிமாலை – சின்னக்கவுண்டர் – இளையராஜா
சாமிக்கிட்ட – வாரம்பூ – இளையராஜா
வளையோசை – சத்யா – இளையராஜா
மானே தேனே – உதய கீதம் – இளையராஜா
15. சண்முகப்ரியா

தகிட ததிமி – சலங்கை ஒலி – இளையராஜா
தம்தன நந்தன – புதிய வார்ப்புகள் – இளையராஜா

16. சிவரஞ்சனி

காத்திருந்து காத்திருந்து – வைதேகி காத்திருந்தாள் – இளையராஜா
குயில்பாட்டு – என் ராசாவின் மனசிலெ – இளையராஜா
வள்ளி வள்ளி – தெய்வவாக்கு – இளையராஜா
வா வா அன்பே – ஈரமான ரோஜாவே – இளையராஜா

17. கரஹரப்ரியா

பூ மலர்ந்திட – டிக் டிக் டிக் – இளையராஜா
தானா வந்த சந்தனமே – ஊரு விட்டு ஊரு வந்து – இளையராஜா
பூங்காத்து திரும்புமா – முதல் மரியாதை – இளையராஜா

18. ஹிந்தோளம்

நானாக நானில்லை – தூங்காதே தம்பி தூங்காதே – இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
ஆனந்தத் தேன்காற்று – மணிப்பூர் மாமியார் – இளையராஜா
கண்ணா உன்னைத் தேடுகிறேன் – உனக்காகவே வாழ்கிறேன்

19. சலநாட்டை

ஆளை அசத்தும் – கன்னிராசி – இளையராஜா
பனிவிழும் மலர்வனம் – நினைவெல்லாம் நித்யா – இளையராஜா

20. காபி

சங்கத்தில் பாடாத கவிதை – ட்டோ ராஜா – இளையராஜா
ஏ பாடல் ஒன்று – ப்ரியா – இளையராஜா
செம்பருத்திப் பூவு – செம்பருத்தி – இளையராஜா

21. சந்திரகெளன்ஸ்

பாட வந்ததோர் கானம் – இளமைக் காலங்கள் –  இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
அழகுமலர் ஆட – வைதேகி காத்திருந்தாள் – இளையராஜா
வெள்ளிச் சலங்கைகள் – காதல் ஓவியம் – இளையராஜா

22. சுபபந்துவராளி

வைகறையில் – பயணங்கள் முடிவதில்லை – இளையராஜா
தீர்த்தக்கரை ஓரத்திலே – தீர்த்தக்கரையினிலே – இளையராஜா

23. பஹாடி

ஏதேதோ எண்ணம் – புன்னகை மன்னன் – இளையராஜா
ஒரே நாள் – இளமை ஊஞ்சலாடுகிறது – இளையராஜா
இந்த மான் – கரகாட்டக்காரன் – இளையராஜா

24. பேரி

மேகம் கறுக்குது – னந்த ராகம் – இளையராஜா
பூவே பூச்சூடவா – பூவே பூச்சூடவா – இளையராஜா
வெள்ளி கொலுசுமணி – பொங்கி வரும் காவேரி – இளையராஜா
நீலவான ஓடையில் – வாழ்வே மாயம் – கங்கை அமரன்
வசந்த காலங்கள் – தியாகம் – இளையராஜா
சிந்து நதிக்கரை – நல்லதொரு குடும்பம் – இளையராஜா
சின்னஞ்சிறு வயதில் – மீண்டும் கோகிலா – இளையராஜா

25. ஸ்ரீரஞ்சனி

ஒரு ராகம் – உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் – இளையராஜா
பகலிலே ஒரு நிலவினை – நினைவே ஒரு சங்கீதம் – இளையராஜா
நாதம் எழுந்ததடி – கோபுர வாசலிலே – இளையராஜா

26.விஜயநகரி

குடகுமலைக் காற்றில் – கரகாட்டக்காரன்  – இளையராஜா
வண்ணநிலவே – பாடாத தேனீக்கள் – இளையராஜா

27.போஹி

காலைநேரப் பூங்குயில் – அம்மன் கோயில் கிழக்காலே – இளையராஜா
இன்றைக்கு ஏனிந்த னந்தமே – வைதேகி காத்திருந்தாள் – இளையராஜா
தங்கரதம் வந்தது – கலைக்கோயில் – விஸ்வநாதன் ராமமுர்த்தி

28.வகுளாபரணம்

ஆறும் அது ஆழமில்ல – முதல் வசந்தம் – இளையராஜா
சொந்தமில்லை பந்தமில்லை – அன்னக்கிளி – இளையராஜா

29.பாகேஸ்வரி

காவியம் பாடவா – இதயத்தைத் திருடாதே – இளையராஜா
மழை வருது – ராஜா கையை வச்சா – இளையராஜா

30.ஸ்யாம் கல்யாண்

நீ ஒரு காதல் சங்கீதம் – நாயகன்

31.சமுத்திரப்ரியா

கண்ணம்மா – வண்ண வண்ணப்பூக்கள்

32.ரசிகரஞ்சனி

நீலக்குயிலே – மகுடி
எதிலும் இங்கு இருப்பான் – பாரதி
அமுதே தமிழே – கோயில்புறா

சிமுலேஷன் என்ற நண்பரின் இணையப்பக்கத்திலும் தொடர்ச்சியாக நல்ல இசை விவாதங்கள் உள்ளன,பெரும்பாலான கட்டுரைகளை விரும்பி வாசித்தேன். க்ருத்து சொல்லுமளவுக்கு எனக்கு இசைப்பழக்கம் இல்லை

Saturday, June 02, 2018

Dmk

முத்துவேல் கருணாநிதி, இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி  (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளமைப்பருவம்  
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் சூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்[சான்று தேவை]. நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.

அரசியல்
மாணவர் மன்றம்
கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.

முரசொலி நாளிதழ் 
இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 

1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர்
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆண்டு தொகுதி வாக்கு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்கு வாக்கு வேறுபாடு
1957 குளித்தலை 22785 கே. எ. தர்மலிங்கம் காங்கிரசு 14489 8296
1962 தஞ்சாவூர் 32145 பரிசுத்த நாடார் காங்கிரசு 30217 1928
1967 சைதாப்பேட்டை 53401 எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு 32919 20482
1971 சைதாப்பேட்டை 63334 என். காமலிங்கம் காங்கிரசு 50823 12511
1977 அண்ணா நகர் 43076 ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 16438 16438
1980 அண்ணா நகர் 51290 எச். வி. ஹண்டே அதிமுக 50591 699
1989 துறைமுகம் 41632 கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 9641 31991
1991 துறைமுகம் 30932 கே. சுப்பு காங்கிரசு 30042 890
1996 சேப்பாக்கம் 46097 S. S. நெல்லை கண்ணன் காங்கிரசு 10313 35784
2001 சேப்பாக்கம் 29836 தாமோதரன் காங்கிரசு 25002 4834
2006 சேப்பாக்கம் 34188 தாவுத் மியாகான் சுயேச்சை 25662 8526
2011 திருவாரூர் 109014 எம்.இராசேந்திரன் அதிமுக 58765 50249
2016 திருவாரூர் 121473 பன்னேர்செல்வம் அதிமுக 53107 68366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம்
2016 தேர்தல்[தொகு]
2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வேட்பு மனுவில் தனக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்றும், தனது மனைவி மற்றும் துணைவியாருக்கு ரூ. 62.99 கோடி அளவிற்கு சொத்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தனது துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு வங்கிக் கடன் ரூ. 11.94 கோடி உள்ளது என்றும், தனது பெயரில் வங்கிக் கடனோ, காரோ, வேளாண் நிலமோ இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போது தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.44 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருந்ததாக தெரிவித்திருந்தார்.

பொருளாளர் 
1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.

தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
1971-1976—இரண்டாவது முறையாக
1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001—நான்காம் முறை ஆட்சி
2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி
விமர்சனங்கள்[தொகு]
1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க்காரியா கமிசன்  1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது.

தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது..

2008–2009 இல் இவரது ஆட்சியின் போதே பெரும் ஈழத்தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவண் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித பலனைத் தந்த நடவடிக்கைகளை எடுக்காதற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதே காலப் பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

குடும்பம் 
மனைவிகள்

பத்மாவதி
ராசாத்தி அம்மாள்
தயாளு அம்மாள்
மகன்கள்

மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
மு. க. தமிழரசு
மகள்கள்

செல்வி
கனிமொழி
மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), (2009)-2011 தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். மு. க. அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக இருந்தவர். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.

இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

திரைப்படப் பணி
கதை / வசனம் எழுதிய திரைப்படங்களில் சில[தொகு]
கண்ணம்மா
மண்ணின் மைந்தன்
பராசக்தி
புதிய பராசக்தி
மந்திரிகுமாரி
பாலைவன ரோஜாக்கள்
நீதிக்கு தண்டனை
பாசப் பறவைகள்
பாடாத தேனீக்கள்
பாலைவனப்பூக்கள்
மனோகரா
உளியின் ஓசை
பூம்புகார்
இளைஞன்
மேடை நாடகங்கள்
சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
நச்சுக் கோப்பை
புத்தகங்கள்
குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
‎பாயும் புலி பண்டாரக வன்னியன்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்கத் தமிழ்
பொன்னர் சங்கர்
திருக்குறள் உரை
‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
உலகக் கலைப் படைப்பாளி
உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின் முதல்வராக, 2009ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

கடந்த 9. அக்டோபர் 2009 அன்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளான அன்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அதன் தலைவர் வி. சி. குகநாதன் தலைமையில், சம்மேளனத்தின் நிர்வாகிகள் கருணாநிதிக்கு உலகக் கலைப் படைப்பாளி என்ற விருதை வழங்கினர்.

கருணாநிதி தனது 17 வயதில் இருந்து 86 வயது வரை தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். 1947ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் ராஜகுமாரி என்ற தமிழ் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதினார். அவர் எழுதி இப்போது சினிமாவாக தயாராகிக் கொண்டிருக்கும் பொன்னர் சங்கர் அவரது 74வது படைப்பாகும். இதை பாராட்டும் வகையில் பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவும் நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும்  புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.


*டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க!.

*’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.

*தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.

*தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.

*அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.

*கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.

*ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.

*தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.

*சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.

*ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.

*கோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்!.

*ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.

*பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.

*கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.

*ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.

*பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.

*சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.

*’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’  கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.

*12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.

*புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.

*படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.

*கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும்  கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.

*கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.

*கருணாநிதிக்குப்  பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.

*தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.

Mahendran J நேரம் பிற்பகல் 10:53:00

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk