Wednesday, July 20, 2016

யார் நீங்கள்?


குருவிடம்
சீடன்
சொன்னான்.
.
"தவசீலரே..
வாழ்க்கையில்
முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள்
ஏதேனும்
குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் என்ன
செய்யட்டும்?"
.
"மகனே..
நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்?
எருமையாகவா?, கழுதையாகவா?
இல்லை குதிரையாகவா?"
குரு கேட்டார்.
.
"புரியவில்லை குருவே.."
.
"எருமையின்
பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"
.
"எதையும்
கண்டு கொள்ளாது
தன் வேலையைப் பார்க்கும்.."
.
"கழுதையைப்
பின்னால்
தட்டினால்?"
.
"தட்டியவரை
எட்டி
உதைக்கும்.."
.
"ஆனால் குதிரை..?"
.
"முன்னால்
பாய்ந்து
செல்லும்.."
.
"புரிந்ததா..
நம் மீது
பிறர் கூறும்
அவதூறுகளைக் கூட
நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக
மாற்றிக்
கொள்ள
வேண்டும்..
இதுதான்
‪#‎வாழ்க்கைரகசியம்‬.."
.
சீடன்
தெளிவோடும்
மகிழ்வோடும்
புறப்பட்டான்.

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk