தமிழ் இலக்கணம்
**********************
இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும் தமிழில்
பெயர்
வகை
எண்
வேற்றுமை
காலம் போன்றவற்றை
விளக்கச்
சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன .
தமிழின் பொதுவான
கருவி மொழியியல் metalinguistic சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.
தமிழ் இலக்கணம் பெருவாரியாகத் தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன
தமிழ்ச் சொற்கள்
வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும் பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன .
இவை சொற்களுக்கு
இடம்,
எண்,
பால்,
காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன .
இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது .
இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில்
பெயர்ச் சொற்கள்
இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
அவை
#உயர்திணை
#அஃறிணை என்பவை.
உயர்திணை
கடவுளர் மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன .
ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன.
#உயர்திணை
ஆண்பால்
பெண்பால்
பலர்பாலென மூன்று பால்களாகவும்,
#அஃறிணை
ஒன்றன்பால்
பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன.
உயர்திணையுள் அடங்கும் ஆண்பால் பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன .
பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
தமிழில்
#வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
இவை
முதலாம் வேற்றுமை இரண்டாம்வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன.
இப்பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
.
#சொல் வளம்
.
தமிழ்
சொல் வளம்
நிறைந்த மொழி.
நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும் .
திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாகக் கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம் ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும்.
.
#கலைச்சொற்கள்
தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும்.
இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான் இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.
தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்
தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும்
தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன .
அரசு அமைப்புதவிர சில தனி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்திய அரசு அமைப்பு
செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்
தமிழ்நாடு அரசு அமைப்புகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
அறிவியல் தமிழ் மன்றம்
தமிழ் வளர்ச்சித் துறை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
உலகத் தமிழ்ச் சங்கம்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தனி அமைப்புகள்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் போன்ற அமைப்புகள் பங்களிப்பாற்றுகின்றன.
No comments:
Post a Comment