ஒலியை உள்வாங்கி உணர்ந்து பேச முடியும்?
ஏழு வயது வரை அவருடைய உலகம் இருண்டு தான் போயிருந்தது...
அதன் பின் அவருக்கு ஒலியையும் ஒளியையும் ஊட்டி புதுமைப் பெண்ணாய் ஹெலனை மாற்றிய பெருமைக்குரியவர் - ஆன் சல்லிவன்.
ஆன் சல்லிவன் யார்? - ஹெலன் ஹெல்லரின் இருட்டுக்குள் ஒளியேற்றிய காரிகை - ஆசிரியை.
எப்படி கற்பித்தார் எட்டு வயது சின்னஞ் சிறு சிட்டுக்கு?
பொருளை தொட்டுணரச் செய்தார் விரல்களால்...
பின் அதன் பெயரை உள்ளங்கையில் எழுதிக் காட்டினார்.
ஹெலனும் அதை விளையாட்டாக எண்ணி விரைவில் பல சொற்களை கற்றுக் கொண்டார்.
பின் சிறிது சிறிதாக எழுத கற்றுக் கொண்ட ஹெலன் ப்ரெயில் முறையை கற்று தேர்ந்தார்.
பத்து வயது நிறைவதற்கு முன் லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் கிரேக்க மொழிகளை பிரெயில் முறையில் கற்றுக்கொண்டார்.
அடுத்து...
ஹெலன் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்
ஸாரா புல்லர் - ஆசிரியை -'லிப் ரீடிங்' என்கிற உதடுகளை ஸ்பரிசித்து உணர்கிற கலையை கற்றுக் கொடுத்த மேதை.
வாயில் விரல் வைத்து உதடுகள் அசைவை உணர்ந்து ஓசை எழுப்ப பழகி, மற்றவர் அளவுக்கு இல்லாவிடினும், மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு பேச கற்றுக் கொண்டார்.
கேட்கும் திறனை மட்டும் அவரால் பெற இயலவில்லை. அதற்காக அவரும் சோர்ந்து போகவில்லை. உதட்டில் கை வைத்து உதட்டசைவில் வார்த்தைகளை புரிந்து கொள்ள கற்றுக் கொண்டார்.
பிறர் நடக்கும் போது எழும் அதிர்வினால் ஆளை இனம் காணவும் அவர் அறிந்து கொண்டார்.
1904 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். “தி ஸ்டோரி ஆஃப் மை லைப்“ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கல்லூரி பருவத்திலேயே. மொத்தம் 12 நூல்கள்எழுதியுள்ளார். பிரெயில் தட்டச்சு இயந்திரத்தையும் சாதரணமான தட்டச்சு இயந்திரத்தையும் பயன்படுத்த கற்றுக்கொண்டிருந்தார்.
இந்தியா உட்பட 39 நாடுகளில் சொற்பொழிவாற்றியுள்ளார். சேர்ந்த நிதியை பார்வையற்றோர்களுக்கு அளித்தார்.
1964 ஆம் ஆண்டு தனிமனிதருக்கான அமெரிக்காவின் உயரிய விருதான அதிபரின் சுதந்திர பதக்கம் வழங்கப்பட்டது.
ஹெலன் சொன்னவை:
---------------------------------------
*வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்.
*ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பா
ர்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
*மகிழ்ச்சியான வாழ்க்கை - தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
ஜீன் 1-1968-ல் உறக்கத்திலேயே அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.
.
நன்றி :#Herbert_Rajan
No comments:
Post a Comment