Tuesday, June 21, 2016

ஆசிரியம்.


ஆசிரியம் வெறும்தொழிலாகப் பார்க்கப்படுவது கிடையாது. அது சமூக மாற்றங்களை விளைவிக்கவல்ல கருவியாகவே கருதப்படுகின்றது. உலகை மாற்றிய மகத்தான மனிதர்களுள் பலர் ஆசிரியர்களாக இருந்திருப்பது வரலாற்று தரவுகளைப் புரட்டும் போது புலப்படுகின்றது. வெறுமனே வகுப்பறைகளில் பாடப்புத்தகங்களில் இருக்கும் விடயங்களை தயார்பண்ணிக் கற்பிப்பதுடன் மட்டும் ஒரு உண்மை ஆசிரியனின் பணி முடிந்துவிடுவது கிடையாது. ஒரு பிள்ளைக்கு வீட்டில் நல்ல ஆசிரியனும் பாடசாலையில் நல்ல பெற்றோரும் கிடைக்கும் போதே அவனால் தனது முழுமையை எட்ட முடியும் என்பது உளவியவாளர்களின் உரமான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படை எதுவெனில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெற்றோரைப் போலவும் இருக்க வேண்டும் என்பதேயாகும். இது தான் சமூகம் எதிர்பார்க்கும் ஆசிரியத்துவத்தின் மூலமாகும். எனவே ஒரு ஆசிரியன் எப்படி ஒரு பெற்றோராக இருக்க முடியும் என்பது குறித்து தீவிரமாக சிந்தித்தாகவேண்டும்.
🔵SankaranNsk 🔵

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk